சென்னை: அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் குறித்து வங்கிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். வங்கி வரவு, செலவுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை இனி திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.