×

உபி போலீசார் அதிர்ச்சி ஒரே ஆட்டோவில் 27 பேர் பயணம்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஒரே ஆட்டோவில் 27 பேர் பயணித்ததைக் கண்டு போக்குவரத்து போலீசாரே அதிர்ச்சியடைந்தனர். உத்தரப் பிரதேச மாநிலம், பதேப்பூரில் உள்ள பிந்த்கி கோட்வாலி என்ற பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தடுமாற்றத்துடன் வேகமாக சென்ற ஆட்டோவை மடக்கி நிறுத்தினர். பின்னர் ஆட்டோவில் இருந்த அனைவரையும் கீழே இறங்கச் சொல்லியுள்ளனர். அப்போது அந்த ஆட்டோவில் இருந்து மொத்தம் 27 பேர் இறங்கியதைக் கண்டு போலீசாரே அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், ஆட்டோ டிரைவருக்கு ரூ.11,500 அபராதம் விதித்தனர். இந்த சம்பவத்தை அவ்வழியே சாலையில் சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Tags : UP , UP police shocked 27 people traveling in one auto
× RELATED உ.பியில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: அகிலேஷ் நம்பிக்கை