×

இலங்கையிலிருந்து 6 பேர் தனுஷ்கோடி வருகை

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் மணல் திட்டு பகுதியில் படகோட்டிகளால் இறக்கி விடப்பட்ட இரண்டு சிறுவர்கள் உட்பட 6 பேர் மீட்கப்பட்டனர். இலங்கையில் நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சியால், வாழ வழிதேடி அங்கிருந்து பலர் தமிழகத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். இலங்கை தலைமன்னாரில் இருந்து நேற்று முன்தினம் இரவில் படகில் புறப்பட்டு வந்த 6 பேரை, படகோட்டிகள் நேற்று அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனை மணல் திட்டுப்பகுதியில் இறக்கி விட்டு சென்று விட்டனர். தனுஷ்கோடி கிழக்கு கடல் பகுதியில் முதலாம் மணல் திட்டில் தவித்து கொண்டிருந்த 2 பெண்கள், 2 சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேரையும் மீட்பதற்கு மரைன் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். தொடர்ந்து மண்டபம் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹோவர்கிராப்ட் கப்பல் மூலம் மீட்கப்பட்ட ஆறு பேரும் மரைன் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் மற்றும் புலனாய்வு துறையினரின் விசாரணைக்குப்பின் 6 பேரும் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags : Sri Lanka ,Dhanushkodi , 6 people from Sri Lanka visit Dhanushkodi
× RELATED போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில்...