புதுக்கோட்டை: சசிகலா, ஓபிஎஸ் ஒருங்கிணைந்து செயல்பட முயற்சி எடுப்பேன் என்று திவாகரன் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் நேற்று அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் அளித்த பேட்டி:
சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு வெறும் டிராமா. சசிகலாவுடைய வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் வரும் தீர்ப்பில்தான், பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா என்பது தெரியவரும்.
எடப்பாடிக்கு ஓபிஎஸ் தேவைப்பட்டார். எடப்பாடிக்கு, ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவர் தேவைப்படுகின்றனர். தேவைப்படுபவர்களை அப்போது பயன்படுத்திக் கொண்டு அவர்களை தூக்கி எறிவது தான் எடப்பாடி வாடிக்கை. ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்குவது தான் என்னுடைய இலக்கு. சசிகலா, ஓபிஎஸ் ஒருங்கிணைந்து செயல்பட முயற்சி எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.