செங்கல்பட்டு: மாமல்லபுரம் பூஞ்சேரியில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு டிரோன் கேமராக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் ராகுல்நாத் அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பூஞ்சேரியில் 44வது செஸ் ஒலிம்பியாட் வரும் 27ம் தேதி தொடங்கி நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரம் பகுதிகளில் இன்று முதல் டிரோன் கேமராக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.