×

மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. அப்போது, கலெக்டர், பொதுமக்களிடம் இருந்து 261 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள, அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில், வருவாய்த்துறை சார்பில் காஞ்சிபுரம் வட்டம், பரந்தூர் மண்டலம் சிங்காடிவாக்கம் கிராமத்தில் 26 நபர்களுக்கும், பெரும்புதூர் வட்டம் பென்னலூர் கிராமத்தில் 7 நபர்களுக்கும் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி  இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : People's Grievance Meeting , Houses will be given to the public in the People's Grievance Meeting
× RELATED மக்கள் குறைதீர் கூட்டம் ஜூன் 8 வரை ரத்து