செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், புலிகொரடு கிராமத்திற்குட்பட்ட களம் புறம்போக்கு நிலத்தில் இருந்த ஆக்கிரமிரப்புகள் அகற்றப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல்நாத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், புலிகொரடு கிராமத்தில் உள்ள களம் புறம்போக்கு நிலத்தில் இருந்த 11,000 சதுர அடி பரப்பளவில் 13 குடும்பங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் இன்று அகற்றப்பட்டு, இன்றைய சந்தை மதிப்பீட்டில் ரூ.5கோடி மதிப்புடைய நிலங்கள் மீட்கப்பட்டது.