×

அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள், காட்டிக் கொடுப்பவர்கள் கட்சிக்கு தேவையா?: பொதுக்குழுவில் ஓபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சித்த மாஜி அமைச்சர் தங்கமணி..!!

சென்னை: அதிமுகவுக்கு துரோகம் செய்த ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கு தேவையா? என முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆவேசமாக தெரிவித்திருக்கிறார். பல தடைகளுக்கு பின் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த பரபரப்புக்கு மத்தியில் அதிமுக செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த தீர்மானத்தில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்வது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும், ஓபிஎஸ் தரப்பை சமாளிக்கும் நோக்கத்துடன் அதிமுக சட்ட விதிகளில் ஏராளமான திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், அதிமுகவை அழிக்க நாடகம் நடத்தும் ஓபிஎஸ் கட்சிக்கு தேவையா? அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள், காட்டிக் கொடுப்பவர்கள் கட்சிக்கு தேவையா? என பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆவேசமாக பேசியுள்ளார்.  பொதுக்குழுவில் ஓபிஎஸ்க்கு இருக்கை அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் ஓபிஎஸ் கோடாரியுடன் தலைமைக்கழகத்தில் உள்ளார்.

எதிரியை மன்னிக்கலாம்; துரோகியை மன்னிக்கலாமா? என தங்கமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவை அழித்துவிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார். பொதுக்குழுவை நிறுத்த வேண்டும், ஆட்சிக்கு வரக்கூடாது என நினைக்கின்றனர். கோடாரி வைத்து அதிமுக அலுவலகத்தை இடிப்பவர்கள், உண்மையான அதிமுகவினரா? என்றும் தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : Maji Minister ,Thangamani ,OPS , AIADMK, Betrayal, Does the party need it?, OPS-, Thangamani
× RELATED ஓபிஎஸ் அணியினர் அதிமுகவில் ஐக்கியம்