சென்னை: பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்துக்கு கூடுதல் கட்டடங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். மனிதவள மேலாண்மைத்துறையின் கீழ் செயல்படும் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்துக்கு கூடுதல் கட்டடம் திறக்கப்பட்டுள்ளது.