×

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை: தானம் வழங்கி உற்சாகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று பக்ரீத் கொண்டாட்டப்பட்டது. முஸ்லிம் மக்களின் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் நேற்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பக்ரீத் பெருநாள் என்றாலே இல்லாதவர்க்கு இயன்றதை அளிக்கும் தியாகத்திருநாள் என்று முஸ்லிம் மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நேற்று பெரிய காஞ்சிபுரம் சுன்னத் ஜமாஅத்  ஈத்கா மஸ்ஜித் பள்ளிவாசல், தேரடியில் உள்ள கைரூல்லா மஸ்ஜித் பள்ளிவாசல்,  ஓரிக்கை மஜித் பள்ளிவாசல், சதக்கத்துல்லா கான் மஜித் பள்ளிவாசல், ரெட்டி பேட்டை ஹமீதியா மதரஸா பள்ளிவாசல், ஹைதர்பேட்டை ஹைதர் ஷா பக்கீர் மஸ்ஜித் பள்ளிவாசல், ஷேக் பேட்டை இஸ்பந்தியர் மஸ்ஜித் பள்ளிவாசல், நசரத்பேட்டை ஷேக் முகமது அலி ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசல், ஏரிக்கரை மஸ்ஜித் தே  காதிர் அல்லா பத், வாலாஜாபாத் பகுதியில் ஏகனாம்பேட்டை மதினா மஸ்ஜித், வாலாஜாபாத் பெரிய மஸ்ஜித் மற்றும் உத்திரமேரூர் பகுதியில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல் பெரும்புதூர் பகுதியில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல் என காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரித் பண்டிகை முன்னிட்டு முஸ்லிம்கள் புத்தாடை உடுத்தி சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.

இதில், ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் மண்டியிட்டு அல்லாவை வணங்கினார்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் கிளை சார்பாக பெருநாள் திடல் பக்ரீத் தொழுகை ஒலிமுஹம்மதுபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஏழை, எளிய மக்களுக்கு புத்தாடை, அறுசுவை உணவு  வழங்கினார்கள். ஏராளமான முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

செங்கல்பட்டு : பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் பள்ளிவாசல், தர்காக்களில் சிறப்பு தொழுகை நடத்தினர். மேலும்,  ஏழை, எளியவர்களுக்கு இறைச்சியை தானமாக வழங்கினர்.
செங்கல்பட்டு நத்தம் மசூதி மலைத்தெருவில் உள்ள மிகப்பழமையான ஈதுகா பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நேற்று நடந்தது. இதுபோல் மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், கூடுவாஞ்சேரி, தாம்பரம், திருக்கழுக்குன்றம், மறைமலைநகர், கேளம்பாக்கம், திருப்போரூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களிலும், கோவளம், புதுப்பட்டினம் பகுதிகளில் உள்ள தர்காக்களில் சிறப்பு தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள் ஏழை, எளிய மக்களுக்கு இறைச்சி தானமாக வழங்கி மகிழ்ந்தனர்.

Tags : Muslims ,Bakrit , Special prayer for Muslims on the occasion of Bakrit: Donation and encouragement
× RELATED மோடி மீது எடுக்கப்படும் நடவடிக்கை...