×

இலங்கையில் இருந்து கடத்திய ரூ.29 லட்சம் தங்கம் பறிமுதல்; 2 பயணிகள் கைது

சென்னை: கொழும்பு நகரில் இருந்து லங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த இலங்கையில் இருந்து வந்த ஒரு ஆண் பயணி மற்றும் ஒரு பெண் பயணி ஆகியோரை தனி அறைகளுக்கு அழைத்து சென்று தீவிரமாக சோதனையிட்டனர்.

பெண் பயணியின் உள்ளாடைக்கு 392 கிராம் தங்க பசையும், ஆண் பயனியின் உள்ளாடைக்குள் 238 கிராம்  தங்க பசையும் என மொத்தம் 630 கிராம் தங்க பசை இருந்தது. அதனை கைப்பற்றினர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.29 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள் அந்த 2 பயணிகளையும் கைது செய்தனர்.

Tags : Sri Lanka , 29 lakh gold seized from Sri Lanka; 2 passengers arrested
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...