சென்னை: தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தகவல் தெரிவித்தார். 8 ஆண்டுகள் காத்திருந்தும் பணி வழங்கப்படாத நிலையில் ராணிப்பேட்டையை சேர்ந்த ரவி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.