ஸ்ரீநகர்: அமர்நாத் புனித யாத்திரை நடந்துவரும் நிலையில் அங்கு மேக வெடிப்பால் ஏற்படுத்தப்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமான பலரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.