அம்பத்தூர்: வில்லிவாக்கம் அடுத்த ஐசிஎப் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி 10ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் 16 வயது மாணவனும், மாணவியும் நட்பாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பள்ளி விடுமுறை நாளில் மாணவியை மாணவன் பல இடங்களுக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் மாணவி அடிக்கடி வாந்தி எடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளனர். சோதனை முடிவில் மாணவி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய், வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, திருமணம் செய்வதாக மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான மாணவனை போலீசார் தேடி வருகின்றனர்.