×

உலக ஓவிய தினத்தை முன்னிட்டு 5 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியருக்கான ஓவிய பயிற்சி முகாம்; தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கலை பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும், தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 5 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு கலைப்பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் உலக ஓவிய தினத்தினை சிறப்பாகக் கொண்டாடும் விதமாகவும், படைப்பாற்றல் திறனை மேம்படுத்திடும் நோக்கத்திலும், ஓவியப்பயிற்சி முகாம்கள், ஓவியக் கலைக்காட்சிகளை நடத்திட அரசாணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக மண்டல அளவில் 5 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியருக்கு மண்டல கலை பண்பாட்டு மையங்கள் மூலம் ஜவகர் சிறுவர் மன்றங்களில் ஓவியப்பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

தற்போது, சென்னையில் ஓவியப்பயிற்சி முகாம் நடத்தப்பட்ட உள்ளது. அரசு கவின் கலைக்கல்லூரி, சென்னை - 03 வளாகத்தில் 16.07.2022 அன்று நடைபெறும் ஓவியப்பயிற்சி முகாமில் பென்சில் ஓவியம், வாட்டர் கலர் பெயிண்டிங், ஆயில் கலர் பெயிண்டிங் & அக்ரலிக் பெயிண்டிங், பேப்ரிக் பெயிண்டிங் மற்றும் கண்ணாடி ஓவியம் ஆகிய 5 ஓவியக் கலைப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும். ஒரு கலைப் பிரிவிற்கு 30  முதல் 60 மாணவ, மாணவியர் வீதம் 300 மாணவ, மாணவியருக்கு பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சி முகாமில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை கலைப்பயிற்சி அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில், 11.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மாணக்கர்கள் கலைப் படைப்புகளை உருவாக்கி, 3.00 மணி முதல் 4.00 மணி வரை மாணக்கர்களின் கலைப்படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு, கலைக்காட்சி 4.00 மணிக்கு பார்வையாளர்களுக்கு திறந்து வைக்கப்படும்.

ஓவியப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணக்கர்களுக்கு பயிற்சிக்குத் தேவையான பொருட்களும், பங்கேற்புக்கான சான்றிதழும் வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 5 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட ஜவகர் சிறுவர் மன்றங்களில் பயிலும் 150 மாணக்கர்களும், வெளி பள்ளியில் பயிலும் 150 மாணக்கர்கள் என மொத்தம் 300 மாணக்கர்கள் ஓவியப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள ஏதுவாக, மாணக்கர்களின் பெயர், வயது, பிறந்த தேதி, வீட்டு முகவரி, பள்ளியின் பெயர் மற்றும் கலந்து கொள்ளும் கலைப்பிரிவு ஆகிய விவரங்களை கலை பண்பாட்டுத்துறை, ஜவகர் சிறுவர் மன்ற தொலைபேசி எண்ணிற்கு 044 - 28192152 தொடர்பு கொண்டு முன்பதிவு செய்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu Govt ,World Painting Day , Painting training camp for students between 5 to 16 years of age on the occasion of World Painting Day; Tamil Nadu Government Notification
× RELATED புதிய குடும்ப அட்டைகள்...