சென்னை: சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு முன்னாள் அமைச்சர்கள் வருகை தந்துள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் வந்துள்ளனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் முன்னாள் அமைச்சர்கள் வருகை தந்திருக்கின்றனர்.