×

மதுராந்தகம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து; 6 பேர் பலி: 10 பேர் படுகாயம்

மதுராந்தகம் : மதுராந்தகம் அருகே தொழுப்பேடு என்ற இடத்தில் லாரி மீது அரசு பேருந்து மோதியதில் 2 பெண்கள் உட்பட 6 பேர் பலியாகி உள்ளனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப்பேருந்து மோதியதில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயம் அடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொழுப்பேடு என்ற இடத்தில் சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியதில் பேருந்தின் ஒரு பகுதி முழுவதும் சேதமடைந்து 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தல் 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Madhuranthakam , A government bus collided with a lorry standing near Madurandakam. 6 killed: 10 seriously injured
× RELATED மதுராந்தகம் அருகே இளநீர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து