×

மயான பூமி பராமரிப்பு மாநகராட்சி வேண்டுகோள்

சென்னை: வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட போரூர் மின்சார மயான பூமியில் தொடர்ந்து பராமரிப்பு  பணி நடந்து வருவதால், பொதுமக்கள் பிருந்தாவன் நகர் மயான பூமியை பயன்படுத்திக் கொள்ளுமாறு  சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
 சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், கோட்டம்-150, ஆற்காடு சாலையில் உள்ள போரூர் மின்சார மயானபூமியில் பொருத்தப்பட்டுள்ள புகைப்போக்கி (சிம்னி) பழுதடைந்த காரணத்தினால் 3.5.2022 முதல் 6.7.2022 வரை இயங்காது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.  தற்பொழுது சீர்செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருவதால் 16.7.2022 வரை மேற்கண்ட மயானபூமி இயங்காது. எனவே, பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள  வார்டு-149க்குட்பட்ட பிருந்தாவன் நகர் மயான பூமியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Tags : Pleasant Earth Care Corporation , Graveyard, Maintenance, Corporation
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...