×

பெரியபாளையம் அருகே குடோனாக மாறிய நிழற்குடை: பயணிகள் அவதி

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே அத்தங்கி காவனூர் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை வைக்கோல் நிரப்பும் குடோனாக மாறியுள்ளதால் பயணிகள் சிரமப்படுகின்றனர். எல்லாபுரம் ஒன்றியம் பெரியபானையம் அருகே, அத்தங்கி காவனூர் கிராமத்தில் 3000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக, கிராம நிர்வாக அலுவலகம் எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இதனை இப்பகுதியில் உள்ள மாணவர்கள், பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக, மழை, வெயில் காலங்களில் பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில், இந்த நிழற்குடையை ஆக்கிரமித்து தனிநபர் ஒருவர் வைக்கோலை நிரப்பி வைத்துள்ளார். இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சாலையில் நிற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே,  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பயணிகள் நிழற்குடையை மீட்டு, சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Periyapalayam ,Nizhalkudai , Near Periyapalayam, Nizhalkudai has turned into a ghetto: passengers suffer
× RELATED பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி...