சென்னை:: பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்? என்பது குறித்து விரிவான பதில்மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்? என்று எடப்பாடி பழனிசாமிக்கு சரமாரி கேள்வி எழுப்பப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டனவா? அதிமுக பொதுக்குழுவை கூட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விரிவான பதில்மனு தாக்கல் செய்ய அதிமுக, ஈபிஎஸ் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.