சென்னை: பொதுச்செயலாளர் தேர்தலில் ஓபிஎஸ் உட்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று ஈபிஎஸ் தரப்பு தெரிவித்திருக்கிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை கலைத்து தற்காலிக பொதுச்செயலாளரை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தற்காலிக பொதுச்செயலாளரை தேர்வு செய்தபின் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என ஈபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.