×

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் : பிரதமர் மோடி கேட்டறிந்தார்!!

பாட்னா : பீகார் மாநில முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையை எட்டி உள்ளது. உடல்நிலை மோசமானதால் ஜாமீனில் உள்ள லாலு பிரசாத் யாதவ், நேற்று முன்தினம் தனது வீட்டில் தவறி விழுந்தார். இதில் அவரது தோள்பட்டையில் எலும்பு முறிவும் காயமும் ஏற்பட்டது. உடனடியாக அவரை பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவமனைக்கு சென்ற பீகார் முதல்வர் நிதிஷ் குமார், லாலு பிரசாத்தின் மனைவியிடம் உடல்நலம் மற்றும் சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்தார்.

சிறிது நேரத்தில் லாலுவுக்கு உடல்நலம் மோசமானதால் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விமான நிலையத்தில் லாலுவை ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சென்று பார்த்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள லாலுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து லாலு மகன் தேஜஸ்ரீயிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். லாலு பிரசாத்தின் உடல்நிலை மிகவும் மோசமான கட்டத்தை எட்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுநீரக செயலிழப்பு, அதிக ரத்த அழுத்த மாறுபாடு, கூடுதல் சர்க்கரை பிரச்சனையால் லாலு அவதிப்பட்டு வருகிறார். மாட்டுத் தீவன ஊழல் உள்ளிட்ட 5 ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை பெற்ற லாலு, கடந்த 2017ம் ஆண்டு முதல் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். தற்போது ஜாமீனில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Tags : Bihar ,Chief Minister ,Lalu Prasad Yadav ,PM Modi , Bihar Chief Minister Lalu Prasad Yadav's health concerns
× RELATED லாலுவுக்கு கைது வாரண்ட்