விருதுநகர்: தமிழக நெடுஞ்சாலைத்துறையின் முதன்மை ஒப்பந்ததாரரான செய்யாதுரைக்கு சொந்தமான எஸ்.பி.கே. நிறுவனத்தில் 2வது நாளாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள அலுவலகம், வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். செய்யாதுரை மகன்களின் வீடுகள், நூற்பாலை, கல்குவாரி உள்ளிட்ட 8 இடங்களில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடத்தியது.