திருவள்ளூர்: திருவள்ளுர் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் திருவள்ளூர், பெரியகுப்பத்தில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தில் இன்று ( 7 ஆம் தேதி) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமை வகித்து நுகர்வோர்களிடம் குறைகள் கேட்க உள்ளார். எனவே திருவள்ளுர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் மின்துறை சம்பந்தமான புகார்களை நேரில் தெரிவிக்கலாம் என திருவள்ளுர் செயற்பொறியாளர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.