×

ஏஎம்வி.பிரபாகர்ராஜா எம்எல்ஏ ஏற்பாட்டில் 149 மாணவர்களுக்கு கல்வி தொகை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

சென்னை: மாணவ, மாணவிகள் 149 பேருக்கு கல்வி ஊக்கத்தொகையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் விருகம்பாக்கம் எம்எல்ஏவுமான ஏஎம்வி.பிரபாகர்ராஜா ஏற்பாட்டில், விருகம்பாக்கத்தில் நடந்த விழாவில், 149 மாணவ-மாணவிகளுக்கு ₹7.15 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சட்ட-திட்ட குழு செயலாளர் சோமு, மாநில வர்த்தக அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம், மண்டல குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினர்களான மு.ராசா, கே.கண்ணன், மாமன்ற உறுப்பினர்கள் பி.லோகு, ரத்னா லோகேஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் உ.துரைராஜ், எஸ்.டி. தங்கராஜ், மாவட்ட துணை செயலாளர் வாசுகி பாண்டியன், வட்ட செயலாளர் கோவிந்தராஜ், வீ.ஏ.ராஜா, மைக்கேல், பழக்கடை பாஸ்கர், தஞ்சை பாபு, செழியன், பி.கே.குமார், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : MLA ,Minister ,M.Subramanian. , AMV.Prabhakarraja MLA Scholarship for 149 students: Minister M.Subramanian gave
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்