திருச்சி: சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக இன்று காலை நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.இந்நிகழ்வில், அமைச்சர் கே.என் நேரு, அறநிலையத் துறை முதன்மை செயலர் சந்திர மோகன்,உள்ளிட்டோர் பங்கேற்றனர்.