×

சென்னை ராஜிவ்காந்தி சாலையில் விபத்தில் 2 வாலிபர்கள் பலி: போலீசார் விசாரணை

துரைப்பாக்கம்: சென்னை ராஜிவ்காந்தி சாலையில் நடந்த வாகன விபத்தில் 2 வாலிபர்கள் பலியானர்கள். சென்னை துரைப்பாக்கம் சூளைமாநகர் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (30) மற்றும் அவரது நண்பர் பள்ளிகாரணை, மயிலை பாலாஜி நகர், சேர்ந்த ரூபேஸ் (27). இவர்கள் பைக்கில் துரைப்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்தனர். அப்போது செம்மஞ்சேரி ஆலமரம் பேருந்து நிறுத்தத்தை கடந்து சென்றபோது மற்றொரு வாகனத்தின் மீது மோதி நிலைதடுமாறி பைக்குடன் அதே சாலையில் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த வேன் அவர்கள் இருவர் மீதும் ஏறி இறங்கியதுடன், அவர்களின் உடல்களை சில மீட்டர் தூரம் இழுத்து சென்றது. இதில் அபிஷேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த செம்மஞ்சேரி போக்குவரத்து ஆய்வாளர் சுகுமாரன் தலைமையிலான போலீசார் சாலையில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த ரூபேஸ்சை மீட்டு ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறிது நேரத்தில் ரூபேஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதை தொடர்ந்து வாகன விபத்தில் பலியான அபிஷ்க்  மற்றும் ரூபேஸ் இருவரின் உடலை கைபற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து சாலையில் உள்ள தேனீர் கடையில் பொறுத்தியிருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்த போது சிக்னலில் திரும்புவதற்காக ஒரு வாகனம் சாலையில் நின்று கொண்டிருந்த நிலையில் சிக்னலை கடந்து சென்றபோது இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதும், பின்னால் வந்த வேன் வெகு தூரம் வாகனத்துடன் வாலிபரை இழுத்து சென்ற காட்சி பதிவாகியிருந்தது. இச்சம்பவ இடத்திற்கு தாம்பரம் போக்குவரத்து துணை ஆணையர் குமார் விசாரணை மேற்கொண்டார். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தாம்பரம் போக்குவரத்துக்கு புலனாய்வுபிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Rajiv Gandhi Road ,Chennai , 2 youths killed in an accident on Rajiv Gandhi Road in Chennai: Police investigation
× RELATED மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக...