×

நாகை அருகே போலீஸ் அதிரடி சோதனை காரில் கடத்தி வந்த ரூ.1 லட்சம் புதுவை சாராயம் பறிமுதல்-2 பேர் கைது

நாகை : திட்டச்சேரி அருகே காரில் கடத்தப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி சாராய மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.2 பேர் கைது செய்யப்பட்டனர்.புதுச்சேரி மாநிலத்திலிருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுப்பட்டனர்.

அப்போது திட்டச்சேரிஅருகே பனங்காட்டூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வேகமாக கார் வந்தது.அந்த காரை சந்தேகத்தின்பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.சோதனையில் காரில் 50 மூட்டைகளில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள சாராயம் இருந்தது. இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குபதிவு செய்துவிசாரணை நடத்தினர்.

இதில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வெளிப்பாளையம் மிஷன் தெருவை சேர்ந்த பாபு (30),பொறையார் காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த பழனிவேல் ( 40) ஆகிய 2 பேரும் புதுச்சேரி மாநிலத்திலிருந்து காரில் சாராயத்தை கடத்தி சென்றது தெரியவந்தது. இதைதொடர்ந்து திட்டச்சேரி போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

Tags : Nagai , Nagai: Police seized Puducherry liquor bags worth Rs 1 lakh, which were smuggled in a car near Chittacherry. 2 people were arrested.
× RELATED குடிசை வீடுகளில் தீ – பாஜகவினர் மீது வழக்கு பதிவு