×

திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் சாலை விரிவாக்க திட்டத்தில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரம்

திருவள்ளூர்: தமிழக முதல்வரின் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ் ரூ.124 கோடி மதிப்பீட்டில் இரு வழிச்சாலைகள் 4 வழிச்சாலைகளாக மாற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழக முதல்வரின் சாலை விரிவாக்கத்திட்டத்தின் கீழ் ரூ. 124 கோடி மதிப்பீட்டில், திருவள்ளூர் கோட்டத்தின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் - கீழச்சேரி மாநில நெடுஞ்சாலை, மணவாளநகர் - மேல்நல்லாத்துார் மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. சிங்கபெருமாள்கோவில் - ஸ்ரீபெரும்புதுார் - திருவள்ளூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் மணவாளநகர் - மேல்நல்லாத்துார் வரை உள்ள நெடுஞ்சாலை 57 ல், ரூ. 43 கோடி மதிப்பீட்டில் இரு வழிச்சாலை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி துவங்கியது. திருவள்ளூர் அடுத்த கீழ்நல்லாத்தூர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.

இந்த பணியினை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் ஆர்.சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது திருவள்ளூர் கோட்ட பொறியாளர் பி.ஞானவேலு, உதவி கோட்ட பொறியாளர் எஸ்.ஜே.தஸ்நேவிஸ் பர்னாண்டோ உதவி பொறியாளர்கள் ஜெயமூர்த்தி, ராஜ்கமல், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் இருந்தனர். இந்த நெடுஞ்சாலையில் 12 சிறுபாலங்கள் விரிவுப்படுத்தவும் இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை ஜூன் 2023ம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Tags : Tiruvallur District , Thiruvallur District, Chief Minister's Road Expansion Project, 4 lanes
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு...