சென்னை: திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவரும், முதலவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (ஞாயிறுக்கிழமை) காலை 9.30 மணிக்கு நாமக்கல், தேசிய நெடுஞ்சாலை, பொம்மகுட்டையில் ‘நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் மாவட்ட செயலாளர்கள், மாநில அமைச்சர்கள், திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள்,
துணைத் தலைவர்கள், நகர்ப்புற உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பு வரப்பெற்றவர்கள் அனைவரும் மாநாட்டு பந்தலில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் காலை 8.30 மணிக்கு முன்னரே வந்து அமர்ந்திட வேண்டும். ஏனெனில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சரியாக 9 மணிக்கு மாநாட்டு மேடைக்கு வந்துவிடுவார். எனவே, மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் அனைவரும் காலை 8.30 மணிக்கு முன்னரே மாநாட்டு பந்தலில் வந்து அமர்ந்திட கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.