×

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்; தாயின் கள்ளக்காதலன் போக்சோவில் கைது

கோவை: கோவை அருகே உள்ள மதுக்கரையை சேர்ந்த 38 வயது பெண். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவரது கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் பாலசுப்ரமணியம் (48) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

பெண்ணின் மகள் தற்போது பிளஸ் 1 படித்து வருகிறார். இவரிடம் பாலசுப்ரமணியம் ஆபாச வீடியோக்களை காண்பித்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். இது குறித்து மாணவி தனது தாயிடம் கூறியும் அவர் அதனை கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து பாலசுப்ரமணியத்தின் அத்துமீறல் அதிகரிக்க தொடங்கியது. இந்த கொடுமை தாங்க முடியாத மாணவி இது குறித்து தனது பள்ளி தலைமை ஆசிரியையிடம் தெரிவித்தார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிளஸ் 1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பாலசுப்ரமணியத்தை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Pocso , Plus 1 student rape; Mother's false boyfriend arrested in Pokோmon
× RELATED பூந்தமல்லி அருகே பள்ளி வேனில்...