மதுரை: முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது என ஐகோர்ட் கிளை தெரிவித்தது. மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்களுக்கு தேவையான தகுதியற்றவர்களை பணியில் அமர்த்த நேரிடும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்க தலைவர் ஷீலா தொடர்ந்த வழக்கில் நீதிபதி ரமேஷ் கருத்து தெரிவித்தார்.