திருவள்ளூர் : பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள 130 கிலோ தங்கத்தை எஸ்பிஐ வங்கியிடம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஒப்படைத்தார். தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் சுத்த தங்கமாக உருக்குவதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.