×

கூடுவாஞ்சேரி அருகே பொதுப்பணித்துறை பெண் அதிகாரியின் வீட்டை உடைத்து 32 சவரன் கொள்ளை

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே ஆதனூர் ஊராட்சியில் பொதுப்பணித்துறை பெண் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் 32 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் ஊராட்சி 2வது வார்டு, ஏவிஎம் நகரை சேர்ந்தவர் சந்திரா (38). இவர், பொதுப்பணித்துறையில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது, கணவர் விஜயகுமார் (45). வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வருகிறார்.இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 24ம் தேதி சந்திரா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு விருதாச்சலத்தில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார்.

இதில், முன்பக்க கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றார். அப்போது, பின் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார். இதனையடுத்து பெட்ரூமில்  துணிமணி உள்ளிட்ட பொருட்கள் சிதறிக் கிடப்பதை கண்டும், இதில் பீரோவில் வைத்திருந்த 32 சவரன் நகைகள் கொள்ளை போனது கண்டும் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சந்திரா, மணிமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில், மணிமங்கலம் போலீசார் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர்கள் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.மேலும், இது குறித்த புகாரின்பேரில் மணிமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Guduvancheri , 32 shaving robbers break into the house of a female public works officer near Guduvancheri
× RELATED கீரப்பாக்கத்தில் குறைந்த மின்னழுத்த...