சென்னை: விழுப்புரம் மாவட்டம் வானூர் நடுக்குப்பத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் (52). இவர், அதே பகுதியை சேர்ந்த சம்பந்தம், கமல்நாதன், சக்தி ஆகியோருடன், பைபர் படகில் நேற்று முன்தினம் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் திரும்பி வராததால், இதுபற்றி மீன்பிடி துறைமுக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், தர்மலிங்கம் சென்ற பைபர் படகு காற்று அதிகம் வீசிய காரணத்தால் கவிழ்ந்து 4 பேரும் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த கானத்தூர் ரெட்டி குப்பத்தை சேர்ந்த மீனவர்கள், 4 பேரையும் மீட்டது தெரியவந்தது. அவர்களை மீட்டு காசிமேட்டிற்கு அழைத்து வந்தனர்.