×

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு 1 முதல் தடை: ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக்குக்கு ஜூலை 1ம் தேதி முதல் தடை விதிக்கப்படும் என்று ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க பிளாஸ்டிக் பொருட்களுக்கு பல்வேறு தடைகள் மற்றும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக்குக்கு ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்படும் என்று ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: சுற்றுச்சூழல் அமைச்சக அறிவிப்பின்படி, பாலிஸ்டிரீன் மற்றும் விரிவாக்கப்பட்ட பாலிஸ்டிரீன் பொருட்கள் உட்பட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும்  பயன்பாடு ஆகியவை ஜூலை 1, 2022 முதல் தடை செய்யப்படும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கை கைவிடுவதற்கு அரசாங்கம் போதுமான அவகாசம் அளித்துள்ளது. பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட காதணிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், மிட்டாய் குச்சிகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் கண்ணாடிகள், பிளாஸ்டிக் அல்லது பிவிசி 100 மைக்ரானுக்கு குறைவான பேனர்கள், பிளாஸ்டிக் ஸ்பூன்ஸ், போர்க்ஸ், கத்திகள், ஸ்ட்ராக்கள், கட்லரி மற்றும் இனிப்புப் பெட்டிகள், சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் அழைப்பிதழ் அட்டைகளில் சுற்றப்படும் பிளாஸ்டிக் பிலிம்கள் ஆகியவை தடை செய்யப்பட்ட பொருட்களாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


Tags : Union Minister , 1st ban on single-use plastic: Union Minister announcement
× RELATED கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி பாஜக...