×

தர்மபுரி கிளை சிறையில் கைதியை பார்க்க வந்தவரிடம் ரூ.1,000 வசூல்

சேலம்: சேலம் மத்திய சிறையின் கட்டுப்பாட்டில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்லில் 15 மாவட்ட மற்றும் கிளைச்சிறைகள் செயல்பட்டு வருகிறது. இச்சிறைகளில் தற்போதைய நிலவரப்படி 300 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைகளில் கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் சிறை அதிகாரிகள் பணம் வசூலிப்பதாக தொடர்ந்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இவ்வாறு வசூல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மத்திய சிறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தர்மபுரியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு தர்மபுரி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரை பார்க்க அவரது உறவினர் சிறைக்கு வந்துள்ளார். அவரிடம் அங்கிருந்த அதிகாரி ஒருவர் ரூ.1,000 வசூலித்துள்ளார். இந்த விவகாரம் வெளியே கசிந்து உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பணம் வசூலித்தது உறுதியானது.

இதையடுத்து யாரிடம் பணத்தை வாங்கினீர்களோ? அவர்களிடமே பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும், இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த அதிகாரி, பணம் வாங்கியவரின் வீட்டிற்கே தேடிச் சென்று பணத்தை ஒப்படைத்துள்ளார். இச்சம்பவம் சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Dharmapuri Branch Jail , Dharmapuri Branch Jail, Bribery, Prisoners
× RELATED குண்டாஸ் முடிந்து வெளியே வந்த ஒரு...