சென்னை: ஆன்லைன் விளையாட்டுக்களால் திறன்கள் மேம்படுவதாக சொல்லப்படுவது தவறானது என நீதியரசர் சந்துரு குழு தெரிவித்தது. அவசர சட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு சந்துரு குழு அளித்த 71 பக்க அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் செயல்படுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.