புதுடெல்லி: தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தலைவராக இருந்த யோகேஷ் சந்தர் மோடியின் பதவிக்காலம் கடந்தாண்டு மே மாதம் முடிவடைந்தது. அதன் பிறகு, சிஆர்பிஎப் இயக்குநர் குல்தீப் சிங், என்ஐஏ.வின் கூடுதல் இயக்குநராக பொறுப்பேற்று கொண்டார். இந்நிலையில், என்ஐஏ.வின் புதிய இயக்குநராக தினகர் குப்தா கடந்த 24ம் தேதி நியமிக்கப்பட்ட நிலையில், நேற்று அவர் பொறுப்பேற்று கொண்டார். குப்தா இதற்கு முன்பு, பஞ்சாப் டிஜிபி.யாக பணியாற்றி வந்தார்.