×

வாகனங்களால் ஏற்படும் ஒலி மாசை தடுக்க விழிப்புணர்வு: ஜூலை 3 வரை நடைபெறுகிறது; போலீஸ் கமிஷனர் துவக்கி வைத்தார்

சென்னை: வாகனங்களால் ஏற்படும் ஒலி மாசை தடுப்பது குறித்து நேற்று முதல் ஜூலை 3 வரை விழிப்புணர்வு நிகழ்வை சென்னை காவல் ஆணையர் தொடங்கி வைத்தார். இன்றைய சூழ்நிலையில் ஒலி மாசுபாடு என்பது உலகில் உள்ள அனைத்து குடிமக்களையும் பாதிக்கும் கடுமையான விஷயம் ஆகும். ஆரோக்கியமான சத்தம் பகலில் 55 டெசிபலையும் இரவில் 40 டெசிபலையும் தாண்டக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. ஒலி மாசுபாட்டின் மிகவும் பொதுவான ஆதாரம் மோட்டார் வாகனத்தின் ஹாரன் ஆகும். இது எரிச்சல் மற்றும், உயர் பதற்றம், அதிக மன அழுத்தம், தூக்கமின்மை, இதய நோய், மனநோய் போன்ற உடல்நல பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறது.

‘நோ ஹான்கிங்’ (No Honking) என்பது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடங்கப்பட்ட சிறப்பு இயக்கமாகும், இது தொடர்ச்சியான மற்றும் தேவையற்ற ஹாரன் அடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒலி மாசுபாடு மட்டுமின்றி, சாலை விபத்துகளுக்கும் வழிவகுக்கும், ஹாரன் அடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து, ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களுக்கு அறிவுரை வழங்கவும் இந்த இயக்கத்தின் நோக்கமாக உள்ளது.

ஒலி சத்தம் எழுப்பாமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த,  சென்னை போக்குவரத்துக் காவலர்கள் நேற்று முதல் ஜூலை 3 வரை ஒலி எழுப்பாமை விழிப்புணர்வு வாரத்தைக் கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை  காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நேற்று  காலை 11 மணிக்கு, அசோக் நகர், அசோக் பில்லர் அருகில் ஒலி மாசு விழிப்புணர்வு வாரத்தை (No Honking awareness week) துவக்கி வைத்து, வாகனங்களில் தேவையற்ற இடங்களில் ஹாரன்கள் ஒலிப்பதால் ஏற்படும் ஒலி மாசு குறித்த போக்குவரத்து விழிப்புணர்வு முகாமினை துவக்கி வைத்தார்.

பின்னர் நண்பகல் 12.15 மணியளவில், வேப்பேரி காவல் ஆணையரகம் அருகில், ஈ.வெ.ரா.சாலை - ஈ.வி.கே.சம்பத் சாலை சந்திப்பிலுள்ள சிக்னலில், போக்குவரத்து பிரசார வாகனத்தின் (Traffic Propoganda Vehicle) இயக்கத்தை துவக்கி வைத்து, பள்ளி மாணவ, மாணவியர்களுடன் போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை  காவல் கூடுதல் ஆணையர் போக்குவரத்து  கபில்குமார் சி சரத்கர், போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். நேற்று முதல் ஜூலை 3 வரை சென்னை நகரின் பல்வேறு சந்திப்புகளில்  நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி
* 50,000 கையொப்பங்கள் மற்றும் 1.5 லட்சம் பேனா மற்றும் காகித கையொப்பங்கள் மற்றும் ஒலி எழுப்பாமை உறுதிமொழி.
* காவல் ஆணையர் கட்டிடத்தில் ஒலி எழுப்பாமை விழிப்புணர்வு ராட்சத பலூன்.
* 1200 பதாகைகளுடன் 100 சந்திப்புகளில் பள்ளி குழந்தைகள் விழிப்புணர்வு.
* 50 சந்திப்புகளில் விழிப்புணர்வு பேனர்கள்.
* 100 சந்திப்புகளில் ஆன்ட்டி ஹான்கிங் அறிவிப்பு மற்றும் பாடல்களை இசைத்தல்.
* 100 சந்திப்புகளில் சிவப்பு விளக்கின் போது கைகளை உயர்த்தி உறுதிமொழி எடுப்பது.
* மக்கள் அதிகம் வரும் இடங்களில் தங்கள் முகத்தை வைத்து, ஹான்கிங் எதிர்ப்பு உறுதிமொழியுடன் புகைப்படம் எடுக்கவும், இந்த புகைப்படங்களை DP ஆக வைக்குமாறும், GCTP சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்ய GCTP WhatsApp எண்ணுக்கு 90031-30103 என்ற எண்ணுக்கு புகைப்படங்களை அனுப்பவும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
* பள்ளிக் குழந்தைகளுக்கான ஹான்கிங் எதிர்ப்பு கோஷங்கள் / ஓவியப்போட்டி.
*  115 VMS போர்டில் (GCC-100, GCTP-15) ஆக்கப்பூர்வ ஆண்டி-ஹான்கிங் செய்திகள்.
* சென்னையின் 6 FM சேனல்களில் GCP அதிகாரிகளின் ஹான்கிங் எதிர்ப்பு பேட்டிகள் செய்திகள் மற்றும். GCP & GCTP இன் சமூக ஊடகக் குழு ஹான்கிங் எதிர்ப்பு விழிப்புணர்வு செய்திகள் மற்றும் ஹான்கிங் எதிர்ப்பு உறுதிமொழிகளின் புகைப்படங்களை பகிர்தல். காட்சி ஊடகம் மற்றும் சமூக ஊடகங்களில்
*திரைப்படங்கள், விளையாட்டு மற்றும் பிற துறைகளில் இருந்து பிரபலமான நபர்களின் ஆடியோ/வீடியோ செய்திகள்.
* நடமாடும் வாகனங்கள் மூலம் LED திரை விழிப்புணர்வு.
* ஏர் ஹாரன்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனச் சோதனை மூலம் அமலாக்கம்.
* ஒலி மாசுபாடு அளவு பற்றி இந்த விழிப்புணர்வு காலத்தில் கண்காணித்தல்.
போன்ற பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு போக்குவரத்து காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Tags : Commissioner of Police , Awareness to prevent noise pollution caused by vehicles: takes place till July 3; The Commissioner of Police initiated
× RELATED சென்னை விமான நிலையத்தில் “விமான நிலைய...