புதுடெல்லி: ‘வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் இருந்து எதிரிகள் ஒருங்கிணைந்த தாக்குதல் நடத்துவதற்கான ஆபத்துகள் உள்ளன,’ என்று விமானப்படை தளபதி வி.ஆர்.சவுதாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய விமானப்படை தளபதி வி.ஆர்.சவுதாரி நேற்று அளித்த சிறப்பு பேட்டி வருமாறு: அனைத்து முனைகளிலும் இருந்து இந்தியாவுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இது போன்ற ஒரு சூழலை எதிர்கொள்ளும் வகையில் ராணுவ கொள்கைகளை வகுப்பது முக்கியம். உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா நடத்தும் போரினால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை மாற்றங்களை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
Tags : Bach ,Kum ,China ,India ,Air , Attack on Pakistan, China, India, Air Force Commander warns