டெல்லி : அடுத்த மாதம் 18ம் தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதிர்கட்சிகள் சார்பில் மத்திய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியில் களமிறங்குகிறார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு 29ம் தேதி கடைசி நாள் என்பதால் யஷ்வந்த் சின்ஹா இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். பீகாரை சேர்ந்த யஷ்வந்த் சின்கா ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்ததுடன், வாய்பாஜ் பிரதமராக இருந்த போது மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.