* அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நேற்று டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. மழை காரணமாக களம் ஈரமாக இருந்ததால் இப்போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் (22) அறிமுகமானார்.
* பாரிசில் நடந்த உலக கோப்பை வில்வித்தை (3வது கட்டம்) தொடரின் மகளிர் ரீகர்வ் குழு பிரிவில் தீபிகா குமாரி, அங்கிதா பகத், சிம்ரன்ஜீத் கவுர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் பெற்றது.