சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் எடுத்து செல்ல முயன்ற ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை சென்ட்ரல் நிலையத்தில் நேற்று ஆர்.பி.எப் போலீசார் சோதனை செய்தபோது, ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த சாம்பசிவராவ் என்பவரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது, தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று சோதனை செய்த போது அவரிடம் 100 கிராம் எடை கொண்ட 8 தங்க கட்டிகள் இருப்பது தெரியவந்தது.