×

சென்னை, காஞ்சியில் மழைக்காலத்திற்குள் கால்வாய் சீரமைக்க வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில், மழைக்காலம் தொடங்குவதற்குள் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம் நெல்வாய் பகுதியில் உள்ள சுற்று வட்டார கிராமங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 8,000 நெல்மூட்டைகள் உரிய முறையில் பாதுகாக்கப்படாததால் அனைத்தும் மழையில் நனைந்து வீணாகிவிட்டது. இது போன்ற நிலை இனி ஏற்படாதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தெருக்களில் மழைநீர் தேங்காமல் செல்வதற்கும், கழிவுநீர் பாதைகளை சரி செய்வதற்கும், கால்வாய், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளை பராமரிப்பதற்கும் பணிகள் நடந்து வரும் வேளையில் அதனை மழைக்காலம் வருவதற்கு முன் முடித்து விட வேண்டும்.


Tags : GK Vasan ,Chennai, Kanchi , During the monsoon season in Chennai, Kanchi The canal needs to be aligned GK Vasan insists
× RELATED தூத்துக்குடி தமாகா வேட்பாளர் நாளை...