×

2 கோடி ரூபாய்க்கு ஐம்பொன் சுவாமி சிலைகளை விற்க முயன்ற 2 பேர் கைது

கும்பகோணம்: விருத்தாசலம் அருகே இருப்பைகுறிச்சி கிராமத்தில் இரண்டு தொன்மையான ஐம்பொன் சிலைகளை 2 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டில் விற்க முயற்சிப்பதாக சிலை திருட்டு தடுப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து அந்த சிலைகளை கூடுதல் விலை கொடுத்து வாங்குவது போல் போலீசார் நடித்து அந்த இரு சிலைகளையும் கைப்பற்றியதுடன், சிலைகளை விற்க முயன்ற இருப்பை குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மகிமை தாஸ் மற்றும் பெரிய கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்த பச்சைமுத்து ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ஒரு அடி உயரமுள்ள மாரியம்மன் சிலை, ஒன்றேகால் அடி உயரமுள்ள பெருமாள் சிலை கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து மகிமை தாஸ், பச்சைமுத்து ஆகியோரை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் கைதுசெய்து கும்பகோணம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1ல் நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் நேற்று மாலை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ஐம்பொன் சிலைகளையும் நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

Tags : Metal alloy Swami idol, attempt to sell, arrested
× RELATED காதலிக்குமாறு இளம்பெண்ணுக்கு...