×

காவல்துறை புகார் ஆணையம் குறித்த மக்கள் நீதி மய்யத்தின் முன்னெடுப்புகள் தொடரும்: கமல்ஹாசன் தகவல்

சென்னை: காவல்துறை புகார் ஆணையம் தொடர்பான மக்கள் நீதி மய்யத்தின் முன்னெடுப்புகள் தொடரும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு முரணாக தமிழகத்தில் அமைக்கப்பட்ட “காவல்துறை புகார் ஆணையத்தை” சீரமைத்து நீதிபதிகளின் தலைமையில் இந்த ஆணையம் அமைக்கப்படவேண்டும் என்றுகோரி 2020ல் மநீம துணைத்தலைவர் மௌரியாவால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கானது நேற்று  முடித்துவைக்கப்பட்டிருக்கிறது. நாம் கோரிய சீர்திருத்தம் குறித்து உச்சநீதிமன்றத்தில் முறையிடுமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. காவல்துறை புகார் ஆணையமானது உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அமைக்கப்படும்வரை மக்கள் நீதி மய்யத்தின் முன்னெடுப்புகள் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Police Complaints Commission ,People's Justice Commission ,Kamalhasan , Police Complaints Commission, People's Justice Center, Kamalhasan
× RELATED அரசியலை விமர்சிக்க வேண்டியது உங்கள் கடமை: கமல்ஹாசன் பேச்சு