×

சமூக நீதி எனும் ஒளியை எங்கும் பரவச் செய்ய உறுதியேற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: இடஒதுக்கீட்டை உயர்த்தி பிடித்த சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களின் பிறந்த நாளான இன்று சமூக நீதி எனும் ஒளியை எங்கும் பரவச் செய்ய உறுதியேற்போம் என முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; கல்வி - வேலைவாய்ப்பில் நமக்கு மறுக்கப்பட்ட இடத்தில் நம்மை உட்கார வைக்க மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்தி இடஒதுக்கீட்டை உயர்த்தி பிடித்த சமூகநீதிக் காவலர் திரு.வி.பி. சிங் அவர்களின் பிறந்த நாளான இன்று சமூக நீதி எனும் ஒளியை எங்கும் பரவச் செய்ய உறுதியேற்போம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Tags : Chief Minister ,MK Stalin , We are committed to spreading the light of social justice everywhere: Chief Minister MK Stalin's tweet
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...