மும்பை: உலக அளவில் பல நாட்டு பங்குசந்தைகளில் ஏற்பட்ட ஏற்றத்தை பின்பற்றி இந்திய பங்குச்சந்தைகளும் உயர்வுடன் முடிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 462 புள்ளிகள் உயர்ந்து 52,728 புள்ளிகளில் வர்த்தகமானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து விற்பனையானது.