×

முதுமலை சாலையோரத்தில் உணவு தேடி வரும் மான்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

பந்தலூர்:  முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் வனவிலங்கு சரணாலய பகுதியில் யானை,  புலி, சிறுத்தை, செந்நாய், கரடி, கடமான்கள், காட்டு மாடுகள் உள்ளிடட வனவிலங்குகள் அதிகமாக உள்ளன. இப்பகுதியில், கோடை காலங்களில் கடும் வறட்சி நிலவி வந்தது. தற்போது, தொடர்ந்து மழை பெய்து வருவதால் வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கின்றது. இதனால், யானைகள் மற்றும் மான்கள் சாலையோரங்களில் கூட்டம் கூட்டமாக உணவு தேடி வருகின்றது.

அவற்றை அந்த வழியாக வரும் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி மான் கூட்டத்தை கண்டு ரசித்து செல்கின்றனர்.முதுமலை வரும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை பார்த்து ரசிப்பதற்காக வனத்துறை சார்பில் வாகன ஏற்பாடுகளும் உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர்.



Tags : Mumbumalai , Mudumalai roadside Deer in search of food: Tourist sightings
× RELATED சிங்காரா வனத்தில் காட்டு யானை தாக்கி குட்டி யானை பலி